நீட் தேர்வு அடிப்படையில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மாணவிக்கு மருத்துவ இடம் - கல்விக் கடன் கோரி ஆட்சியரிடம் மனு

நீட் தேர்வின் மூலம் பல் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ள அருந்ததிய வகுப்பை சேர்ந்த மாணவிக்கு, கல்விக் கடன் பெற்று தர அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி பகுதியை சேர்ந்த கவுசல்யா, என்பவரது மகள் ஹேமா ஸ்ருதி. இவர் இந்தாண்டு, அப்பகுதியில் உள்ள தம்பு மேல் நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பல் மருத்துவராக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஸ்ருதி, நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார். 

அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மாணவி ஸ்ருத்திக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் தாலம்பூர், ஸ்ரீ வெங்கஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்வி கட்டணம் செலுத்த போதிய வசதி இல்லாததால், கல்வி கடன் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவி ஸ்ருதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

தந்தை ஆதரவு இல்லாமல், தாயார் கூலி வேலைக்கு சென்று இதுவரை படித்து வந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் கல்வி கட்டணம் செலுத்தி பல் மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்தார். எனவே  கல்வி கடன் பெற்றுத் தர அரசு உதவ வேண்டும் என மாணவி ஸ்ருதி வேண்டுகோள் விடுத்தார்

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...