நிரம்பி வழியும் நிலையில் அவினாசி குளம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீரை திறந்து விடும் அதிகாரிகளை தடுக்கும் பொதுமக்கள்

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அசனெல்லி பாளையத்தில் இருக்கும் குளமும் இந்த மழையால் முதல் முறையாக நிரம்பியது. 



இதனால் குளத்தில் இருந்து வெளியேறும் நீர் வழக்கமாக செல்லும் பாதையை விட்டு விலகி, குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்றது. எனவே, சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல,  அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குளத்தின் அருகே இருக்கும் குடியிருப்புகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தி விட்டு, குளத்தில் இருந்து நீரை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நகராட்சியின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

குளம் நீரின்றி வறண்டு கிடந்த போது பொதுமக்கள் அதிகாரிகளின் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதாகவும், தற்போது குளத்தில் இருந்து நீரை வெளியேற்றினால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 

இதனால், நேற்று (10,09,2017) இரவு பொதுமக்கள் ஏராளமானோர் போரட்டத்தில் ஈடுபட்டதால், குளத்தில் இருந்து நீரை வெளியேற்றும் முடிவை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். 

இதேபோல, அதே பகுதியில் உள்ள தாமரைக்குளம் நிரம்பிய போதும், அதிலிருந்து நீரை வெளியேற்றவும், குளத்தை தூர்வாருவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதைக் கண்டித்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...