ஈஷா அவுட்ரீச்சின் இலவச கண்பரிசோதனை முகாம்

ஈஷா அவுட்ரீச், சோழா குழுமம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து ஈஷா யோகா மையத்திற்கு அருகில் உள்ள ஆலந்துறை அரசுப் பள்ளியில் இலவச கண்பரிசோதனை முகாம் நடத்தியது. 

இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கண் தொடர்பான குறைபாடுகளை பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 13 பேர் கண்புரைக்கான இலவச அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேலும், இந்த முகாமில் 20 பேருக்கு மிக குறைந்த விலையில் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் 25-ம் தேதி ஈஷாவை அடுத்துள்ள செம்மேடு கிராமத்திலும், ஜூலை 16-ம் தேதி விராலியூர் கிராமத்திலும், ஜூலை 30-ம் தேதி மத்வராயபுரத்திலும் இதேபோன்ற கண்பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன. 

கிராமபகுதிகளில் மக்களின் நலன்கருதி இதுபோன்ற கண்பரிசோதனை முகாம்கள் அடுத்தடுத்து நடக்கவிருப்பதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....