கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம்

கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம் ஒசூர் ரோடு, ஆத்ரா ஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் குத்துவிக்கேற்றி விழாவினை தொடக்கி வைத்தார். கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் தலைவர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். துணைத் தலைவர் முத்துகுமார் வைர விழா கொண்டாட்டத்தில் கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் பற்றிய விரிவுரையை எடுத்துரைத்தார்.



பின்னர், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கத்தின் வைர விழாவின் முத்திரை சின்னத்தை அச்சங்கத்தின் முன்னாள் தலைவர் சோமசுந்தரம் வெளியிட்டார்.



அதனைத் தொடர்ந்து, டிப்ளமோ தர மேலாண்மை படிப்பிற்கான புதிய கோர்ஸ் சங்கத்தின் சார்பில் துவங்கப்பட்டது. இதுகுறித்து கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் மற்றும் டிப்ளமோ தர மேலாண்மை கோர்ஸ் குழுவின் தலைவர் ஸ்ரீனிவாசன் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழக டீன் சரவண செல்வன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு டிப்ளமோ தர மேலாண்மை படிப்பின் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார்.



பின்னர், டிப்ளமோ முதுகலை பட்டப்படிப்பில் பயின்ற 30 மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ் வழங்கும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் உறுப்பினர் விவேக் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கொடிசியா தலைவர் சுந்தரம் மாணவர்கள் மத்தியில் பட்டமளிப்பு உரையை நிகழ்த்தினார். பின்னர், அனைவருக்கும் பட்டமளிப்பு சான்றிதழை வழங்கி கெளரவித்தார். இறுதியில் கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.



இந்நிகழ்வில், கோயம்புத்தூர் உற்பத்தித்திறன் சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...