அரசியல் களத்தில் கமல்..! விரைவில் உதயமாகிறதா புதிய கட்சி..?

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது டிவிட்டுகள் பலவும் கூட அரசியலுக்கு வருவதை உறுதிசெய்வதாகவே உள்ளன.

கடந்த சில காலமாக நடிகர் கமல்ஹாசன் அரசு நிர்வாகத்தைக் கண்டித்தும், ஆளும் அரசியல் கட்சியினரைக் கண்டித்தும் டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்து வருகிறார். மேலும், சில அரசியல் கட்சியினரை நேரடியாகவே தாக்கி டிவிட்டிலும் தனது கருத்தினை பகிர்ந்து வருகிறார்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு தான் அரசியல் களத்தில் ஏற்கனவே நுழைந்து விட்டேன் என பதிவு வெளியிட்டிருந்தார். சமூக வளைதலங்களிலும் இது பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது.

தனது ஆரம்பகாலம் முதலே முற்போக்கு சிந்தனைகளுடன் செயல்பட்டு வரும் கமல், எந்த கட்சியில் இணைந்து செயல்படுவார் என தமிழக மக்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதலமைச்சர் பினராய் விஜயனை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், 'பினராய் விஜயனிடம் அரசியல் கற்றுக்கொள்ள வந்தேன்' என்று கூறினார். இது கமலின் அரசியல் பிரவேசத்துக்கு முன்னோட்டமாக உள்ளதாக பேசப்பட்டது. மேலும், அவர் கம்யூனிஸ்ட் அமைப்புடன் இணைந்து செயல்படுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது, அவர் புதிய கட்சியினை விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, உள்ளாட்சித் தேர்தலிற்கு முன்பு தனது கட்சியினை கமல் அறிமுகம் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...