ஆர்.எஸ் புரம் பகுதியில் 'ஒன் சைடு பார்க்கிங்' முறையை காவல்துறை ஆணையர் துவங்கி வைத்தார்



கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கோவை ஆர்.எஸ் புரம் 23வது வார்டு பகுதிக்குட்பட்ட கெளலிபிரவுன் சாலை முதல் ராமலிங்கம் சாலை வரை மொத்தம் 15 வீதிகளில், 14.09.2017 (இன்று) முதல் 'ஒன் சைடு பார்க்கிங்' முறை அமல்படுத்தப்படுகிறது.



இதனை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் இன்று தொடக்கி வைத்தார். பின்னர், இதுகுறித்து அவர் கூறுகையில், "வாகன கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இந்த 23-வது வார்டு பகுதியில் 'ஒன் சைடு பார்க்கிங்' வசதியை ஏற்படுத்தி கொடுத்த வெல்ஃபேர் அசோசியேஷன்-க்கு நன்றி. இந்த 'ஒன் சைடு பார்க்கிங்' வசதியினை இங்கு வசிக்கும் பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். மாதம் ஒரு பகுதி, என மாதம் ஒரு முறை 'ஒன் சைடு பார்க்கிங்' முறை மாற்றி அமைக்கப்படும்".



மேலும் இதுபற்றி கூறுகையில், "23வது வார்டு குடியிருப்பு மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கு இணங்க 'ஒன் சைடு பார்க்கிங்' அமைத்து தரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை இப்பகுதி மக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். வீதிகளின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

திருட்டு மற்றும் கொலை சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, மக்கள் அவரவர் வீடுகள் மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் சிசிடிவி காமேராக்களை பொறுத்திட வேண்டும், என்று காவல் ஆணையர் அமல்ராஜ் வலியுறுத்தினர்.



Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...