நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவை கண்டித்து நாளை (செப்.,15) பாஜக ஆர்ப்பாட்டம்


தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும அமைப்புகள் சார்பில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கடந்த 13-ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகர்களில் போராட்டம் நடத்தியது. காஞ்சிபுரத்தில் நடந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடிப் பேசினார். 

திமுகவின் இந்தப் போராட்டத்திற்கு மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு, நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி. நாளை (செப்.,15) அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் திமுகவிற்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...