கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த அரசு ஊழியர்கள் கைது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பணிகளை புறக்கணித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கோவையில் நடைபெற்று வரும் ஜேக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.



கோவையில், நேற்று (செப்டம்பர் 14) 7-வது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நாமம் இட்டு பிச்சை எடுக்கும் வகையில் வேடமிட்டும் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் சமையல் செய்து உணவருந்திவிட்டு அங்கேயே தங்கியதுடன், நடனமாடி சக ஊழியர்களை உற்சாகப்படுத்தினர்.

தொடர்ந்து, நேற்று இரவு 9 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அடையாள அட்டை இல்லாமல் ஆட்சியர் அலுவலகத்திற்குள் வரும் ஊழியர்களை வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...