உதகை மலையரசி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கம்

உதகை மலையரசி கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை மற்றும் தங்கமழை பரிசுத் திட்டத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

தீபாவளி 2017 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு கோ- ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் இன்று (செப்டம்பர் 15) முதல் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை 30 சதவிகிதம் அரசு சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறது.

பட்டு சேலைகள்:-

தமிழகத்தின் காஞ்சிபுரம், கோவை, சேலம், ஆரணி, தஞ்சை போன்ற பல்வேறு இடங்களில் நெசவு செய்யப்படும் புதிய வடிவமைப்புகளுடன் கூடிய மென் பட்டு சேலைகள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

பருத்தி சேலைகள்:-

தீபாவளி 2017 சிறப்பு விற்பனைக்காக பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட உயர்ரக பருத்தி சேலைகள், கோவை காட்டன், கோரா காட்டன் சேலைகள், நெகமம், காஞ்சி காட்டன், காரைக்குடி செட்டிநாடு காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன், சேலம் காட்டன், ஜெயங் கொண்டம் சேலைகள் போன்ற பாரம்பரியமான பருத்தி சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி இரகங்கள்:-

ஏற்றுமதி இரங்களுக்கான படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், ஹோம் ஃபர்னிஷிங் இரகங்கள் குஷன் கவர்கள், குவில்ட் போன்ற ஏற்றுமதி தரத்தில் அழகிய வடிவமைப்புகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது உதகை விற்பனை நிலையம் ரூ.105.77 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளது. நடப்பு ஆண்டிற்கு தீபாவளி 2017-க்கு ரூ.130 லட்சங்கள் உதகை விற்பனை நிலையத்திற்கு விற்பனை இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ர.நடரஜன், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) ஆர்.மோகன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை உதகை விற்பனை நிலைய மேலாளர் பொறுப்பு எஸ்.சபீனாநாஸ் மற்றும் இதர பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...