நடிகர் விஷாலின் சவாலில் வெற்றிபெற்ற தமிழ்கன் இணையதளம்

புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்த தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணைதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று(14.09.2017) வெளியானது. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் திருட்டு வீடியோவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இருப்பினும், புதிதாக படம் திரைக்கு வரும் படங்ளை, அன்றைய தினமே சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களில் வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விஷால் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் வெளிப்படையாக சவால் விட்டது. 

இதையடுத்து. நேற்று வெளியான துப்பறிவாளன் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம் தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து திரையரங்குகளைக் கண்காணித்தார். 

இந்த நிலையில், துப்பறிவாளன் திரைப்படம் தமிழ்கன் இணையதளத்திலேயே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வெளியிடப்பட்ட அந்த படத்தை இதுவரை 60,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அதிரடி மன்னன் விஷாலிடம், தமிழ்கன், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் வெற்றி பெற்றுள்ளன. 

நடிகர் விஷாலின் சவாலில் வெற்றிபெற்ற தமிழ்கன் இணையதளம் 

புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வந்த தமிழ்கன் இணையதளத்தின் அட்மின் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் திரைப்படம் இணைதளத்தில் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் நேற்று(14.09.2017) வெளியானது. இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் அவரே தயாரித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் உள்ள விஷால் திருட்டு வீடியோவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

இருப்பினும், சட்டவிரோதமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் ஆகிய இணையதளங்களில், புதிதாக படம் திரைக்கு வரும் போது, அன்றைய தினமே வெளியிட்டு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.  இந்த இணையதளத்தில் அட்மினாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பேன். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என விஷால் கூறியிருந்தார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்கன் இணையத்தின் அட்மின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம். எந்த அட்மினும் கைது செய்யப்படவில்லை. உங்களால் முடிந்தால் துப்பறிவாளன் படத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என தமிழ்கன் இணையம் வெளிப்படையாக சவால் விட்டது.

இதையடுத்து. நேற்று வெளியான துப்பறிவாளன் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம் தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து திரையரங்குகளைக் கண்காணித்தார். 

இந்த நிலையில், துப்பறிவாளன் திரைப்படம் தமிழ்கன் இணையதளத்திலேயே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வெளியிடப்பட்ட அந்த படத்தை இதுவரை 60,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அதிரடி மன்னன் விஷாலிடம், தமிழ்கன், தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்கள் வெற்றி பெற்றுள்ளன. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...