இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31-ந்தேதிக்குள் அறிவிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்றத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் 45 ஆண்டுகளாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருந்த இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சின்னத்தை பெறுவதற்காக அ.தி.மு.க. அணிகள் சார்பில் பிரமாண பத்திரங்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ்-சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்ட போது அதிக பெரும்பான்மை உள்ள பிரிவுக்கு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியது.

எனவே, ஓய்வு பெற்ற நீதிபதி முன்னிலையில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் அணியில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டத்தை கூட்டி தேர்தலை நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறும் அணியினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த பிரச்சனை குறித்து தேர்தல் ஆணையம் எத்தனை நாளில் முடிவெடுக்கும் என்பது பற்றி விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (15.09.2017) நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இரட்டை இலை சின்னத்தை யாருக்கு? என்பது குறித்து முடிவு எடுப்பதில் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.  இதனைக் கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தாமல் இது போன்ற பிரச்சனைகளுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சியில் யாருக்கு சின்னம் ஒதுக்குவது என்பது குறித்து 16 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. ஆனால் இந்த பிரச்சனையில் மார்ச் மாதம் 2 அணிகள் சார்பிலும் மனு கொடுத்தும் தேர்தல் ஆணையம் இதுவரை முடிவு எடுக்காமல் உள்ளது.

எனவே அக்டோபர் 31-ந் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை முடிவெடுத்து தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...