இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை



கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில், இரண்டு சிறுவர்களுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்துள்ளனர்.

இது தொடர்பாக இன்று (16.09.2017) செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறியதாவது:-



சிலருக்கு குழந்தை பருவத்திலேயே மூட்டுகள் வீங்கி காய்ச்சல் ஏற்படும். இதனால், இருதயத்திற்கு செல்லும் குழாய்கள் பாதிக்கப்பட்டு மூச்சுதிணறல் போன்ற சிரமங்கள் ஏற்படும்.

இப்படிப்பட்ட சிரமங்களுடன் இருந்த தேவராஜ் (13) என்பவருக்கும், கனகராஜ் (27) என்பவருக்கும் அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய குழாய் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் சீனிவாசன், முகமது முன்னத்துல்லாஹ், பிரவீன் ஆகியோர் செய்துள்ளனர்.



தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது 2 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை அரசு காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில், சென்னை, கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இந்த வகை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இது போன்ற நவீன அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...