சாரணர் - சாரணியர் இயக்கத் தேர்தலில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.ராஜா தோல்வி



சாரணர்- சாரணியர் இயக்கத் தலைவருக்கான தேர்தல் சென்னையில் இன்று (16.09.2017) நடைபெற்றது. சாரணர் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கலாவதி தலைமையில் தலைவர், 3 துணைத் தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர் மற்றும் பயிற்சியாளர் ஆகிய பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. 

தலைவர் பதவிக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் போட்டியிட்டனர். 

இதில், மொத்தம் 499 வாக்குகள் உள்ளன. சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரே வாக்களிக்க தகுதியானவர்கள். 

அதன்படி, இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் உறுப்பினர்கள் அனைவரும், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. 

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், முடிவுகளை தேர்தல் அதிகாரி கலாவதி அறிவித்தார். சாரண, சாரணியர் இயக்க தலைவர் தேர்தலில்  234 வாக்குகள் பெற்று கல்வித்துறை முன்னாள் இயக்குனர் மணி வெற்றி பெற்றார். எச்.ராஜா  46 வாக்குகளே பெற்று தோல்வி அடைந்தார்.

மேலும் அவர் கூறியதாவது:- வாக்களிக்க தகுதி உள்ள 499 பேரில் 286 பேர் வாக்களித்தனர். 2 வாக்குகள் செல்லாதவை. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா 52 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் ஒருமனதாக  தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேசிய தலைமை அலுவலகத்திற்கு முறையான தகவலை அளித்தே நாங்கள் தேர்தலை நடத்தினோம். முறைகேடு நடந்திருப்பின் ஹெச்.ராஜா தேர்தலை பார்வையிட வந்து இருக்கத் தேவையில்லை. தேர்தல் முறையாக நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

சாரண சாரணியர் அமைப்பின் துணை தலைவர் தேர்தலில் மணி, ரங்கநாதன் மற்றும் பெரியண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...