சிறப்பாக பணியாற்றிய கோவை ஆய்வாளருக்கு முதலமைச்சரின் அண்ணா பதக்கம் அறிவிப்பு



ஆண்டுதோறும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில், கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல்நிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் கணேஷுக்கு, சிறப்பாக பணியாற்றியதற்கான முதலமைச்சரின் அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். 

விருதுக்கு தேர்வாகியுள்ள காவல் ஆய்வாளர் கணேஷ், நீலகிரி மாவட்டம் தோவாணி பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பை முடித்துள்ளார். கோவை, பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பள்ளியில் உயர்கல்விப் படிப்பை முடித்த அவர்,  1989-92 ஆண்டுகளில் இயற்பியல் இளநிலை படிப்பையும், 1993-94 -ம் ஆண்டுகளில் முதுகலை படிப்பையும் முடித்தார். அதோடு, பி.எட் படிப்பை முடித்த ஆய்வாளர் கணேஷுக்கு, கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 

இதைத் தொடர்ந்து, 1997-ம் ஆண்டு தமிழக அரசின் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டார். 11 ஆண்டுகளுக்கு பிறகு பதவி உயர்வு பெற்ற கணேஷ், கோவை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பந்தயசாலை, வெரைட்டிஹால் சாலை மற்றும் அத்தியாவசிய கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். 

தமிழக அரசின் விருது பெறுவது குறித்து காவல்நிலை ஆய்வாளர் கணேஷ் பேசுகையில், சிறப்பாக பணியற்றியதற்காக இந்த விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...