கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கத்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல், மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கோவையில் சிறுவாணி, கோவை குற்றாலம் போன்ற பகுதிகளில் வெள்ளப் பெருக்கத்தால் மூழ்கியுள்ளது. இதனால், மழை தொடர்ந்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை குற்றாலம் பகுதிகளில் பொதுமக்கள் அனுமதிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழையால், அட்டப்பாடி பகுதியில் நீர் ஓட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது, இதனால், சிறுவாணியில் பகுதியில் நீர் மட்டத்தை அதிகரித்துள்ளது.



மேலும், சிறுவாணி, பில்லூர் மற்றும் பவானி நீர்ப்பாசன பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேபோல், வால்பாறையில் உள்ள அனைத்து நீர்வழிகளும், நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால், ஆழியாறு மற்றும் சோலையார் அணைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...