பெங்களூரில் உள்ள பேருந்து நிலையத்துக்கு பெரியாரின் பெயரை வைக்க கர்நாடகா உள்துறை அமைச்சர் முடிவு

தமிழகத்தின் தலைசிறந்த தலைவரான பெரியாரின் பெயர் பெங்களூரில் உள்ள பேருந்து நிலையத்துக்கு சூட்டப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல சமூக சீர்த்திருத்தங்களை முன்னெடுத்த சீர்த்திருத்தவாதிகளில் பெரியாரின் பங்கு இன்றியமையாதது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுக்கையில் தமிழகத்தில் உள்ள பெண்கள் அறிவிலும், திறமையிலும் ஜொலிப்பதற்கு பெரியார் ஆற்றிய பங்கு அளப்பறியது. 

இந்த நிலையில், தந்தை பெரியாரின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், கர்நாடக மாநிலமான பெங்களூரில் உள்ள பேருந்து நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயர் சூட்டப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார். 

மேலும் திராவிட கலாச்சாரம் வளரவும், சமூக நீதிக்காகவும் பெரியார் பல போராட்டங்களை நடத்தியதன் விளைவாகவே நாம் இன்று பல்வேறு பலன்களை அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக பெரியாரின் அடிக்கோளான மூட நம்பிக்கைகளை தடுக்கும் விதமாக கர்நாடகா அரசு சட்ட மசோதா ஒன்றையும் கொண்டுவர உள்ளதாக ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...