பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணை நிரம்பி வருகிறது. அணை முழுக் கொள்ளளவு 98 அடியை எட்டியதால், வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மேற்கு தொடர்ச்சி மழையால், கோவையில் முக்கிய நதியாக திகழும் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரண்டு ஆண்டுக்குப்பின் பேரூரை தாண்டி நொய்யல் ஆறு உக்கடம் குளம் மற்றும் குறிச்சிக் குளங்களை நோக்கி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...