வால்பாறை முக்கிய சாலையில் மரம் சரிந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை சாலையின் குறுக்கே மரம் சரிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



பொள்ளாச்சி- வால்பாறை வரையிலான மலைப் பாதையானது 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. அடர்ந்த மலைத் தொடரின் குறுக்கே செல்லும் இந்த மலைப்பாதை சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் பாதையாகும்.

இந்நிலையில், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக வால்பாறைக்கு உட்பட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மரச்சரிவும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.



கடந்த சனிக்கிழமையன்று இரவு 11.30 மணியளவில் வால்பாறை செல்லும் 22-வது கொண்டை ஊசி வளைவில் மரம் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், அந்த சாலை வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.



தொடர்ந்து, பயணிகள், பொதுமக்கள், வனத்துறையினருடன் இணைந்து மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நீண்ட நேரத்திற்குப் பின் அதிகாலை சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...