தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ்-யில் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் தங்கமழை திட்டம் துவக்கம்


தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸில் 2017ம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று துவக்கி வைத்தார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிலையங்கள் மூலம் விற்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கைத்தறி ரகங்களுக்கு அனைத்து விற்பனை நிலையங்களிலும் 31-08-2018 வரை 30 சதவிகிம் வரை தள்ளுபடி அளித்துள்ளது.

இது குறித்து மண்டல மேலாளர் கூறியதாவது:- கோவையில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் பட்டு சேலைகள், வேட்டி, சட்டை, குர்தீஸ், சுடிதார், படுக்கை விரிப்புகள் என அனைத்திற்கும் தள்ளுபடி உள்ளது.



பட்டு சேலைகள் 7 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை 15-ற்கும் மேற்பட்ட வகையான சேலைகள் விற்பனைக்கு உள்ளது. இதற்கு 30 சதவிகிதம் தள்ளுபடி உள்ளது. மேலும் பட்டு பூச்சிகளை கொல்லாமல் பட்டு பூச்சிகள் கூட்டை விட்டு வெளியேறிய பிறகு பட்டு நூல் எடுத்து அகிம்சா பட்டினால் தயாரிக்கப்பட்டுள்ள சேலைகள் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு 17 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 20 கோடியாக நிர்ணயம் செய்யபட்டுள்ளது. மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு மொத்த விற்பனை 3.81 கோடிகள், நடப்பாண்டில் விற்பனை குறியீடாக 4.65 கோடி நிர்ணயம் செய்யபட்டுள்ளது" என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...