மாநகராட்சி விதித்த புதிய வரிவிதிப்பினை கண்டித்து அனைத்துக் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சியில் புதிதாக குப்பை வரி மற்றும் குடிநீர் டெபாசிட் கட்டணம் விதிப்பு போன்றவை உயர்த்தப்பட்டது. இந்த புதிய வரி விதிப்புகளை கண்டித்து திமுக, காங்கிரஸ், மதிமுக, சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள் , கொ.ம.தே.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதன் ஓருபகுதியாக அனைத்து கட்சிகள் சார்பில் கோவை மாநகராட்சி முழுவதும் 100 வாட்டுகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மாநகராட்சி விதித்துள்ள புதிய வரிகளை திரும்ப பெற வேண்டும் எனவும், அதுவரை தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.



மேலும், அடுத்தகட்டமாக கோவை மாநகராட்சியை 8 கட்டமாக முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதனை தொடர்ந்து, புதிய வரி விதிப்பு முறைகளை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என தி.மு.க., எம்.எல்.ஏ. கார்த்திக் தெரிவித்தார். இதனை தொடந்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

இதேபோல, டவுன்ஹால் பகுதியில் தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் அப்பாஸ் தலைமையில் ஊர்வலமாக வந்து மறியலில் ஈடுபட்ட 47 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதே போன்று மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போராட்டம் நடத்திய அனைத்துக் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...