வேளாண் பல்கலை முன்னாள் முதல்வரின் லேப்-டாப் திருட்டு- கண்காணிப்பு கேமிராவில் பதிவானது கொள்ளையன் உருவம்

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பொன்னுசாமி (63). தற்போது பணி நீட்டிக்கப்பட்டு அப்பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவர், பொன்னுசாமியின் லேப்-டாப்பை திருடிச்சென்றார்.



ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் அந்த லேப்-டாப்பில் இருப்பதாகவும் உடனடியாக கண்டுபிடித்து தரும்படியும் பொன்னுசாமி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், லேப்டாப்-ஐ திருடிச்சென்ற ஆசாமியின் உருவம் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருப்பது தெரியவந்தது.



தொடர்ந்து, லேப்டாப்-ஐ திருடிச்சென்ற மர்ம நபரின் புகைப்படத்தை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...