வேளாண் பல்கலை முன்னாள் முதல்வரின் லேப்-டாப் திருட்டு- கண்காணிப்பு கேமிராவில் பதிவானது கொள்ளையன் உருவம்

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பொன்னுசாமி (63). தற்போது பணி நீட்டிக்கப்பட்டு அப்பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம ஆசாமி ஒருவர், பொன்னுசாமியின் லேப்-டாப்பை திருடிச்சென்றார்.



ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் அந்த லேப்-டாப்பில் இருப்பதாகவும் உடனடியாக கண்டுபிடித்து தரும்படியும் பொன்னுசாமி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், லேப்டாப்-ஐ திருடிச்சென்ற ஆசாமியின் உருவம் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருப்பது தெரியவந்தது.



தொடர்ந்து, லேப்டாப்-ஐ திருடிச்சென்ற மர்ம நபரின் புகைப்படத்தை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...