ஸ்மார்ட் ரேசன் கார்டில் அடுத்தடுத்து நிகழும் புகைப்பட குளறுபடி! - நேற்று காஜல்...இன்று தேசியகொடி..நாளையாவது தடுப்பார்களா அதிகாரிகள்..?

சேலம் மாவட்டம் ஓமலூரில் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றிருந்தது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் திருப்பூர் மற்றும் தர்மபுரியில் விநாயகர் சுவாமி படம், செருப்பு அணிந்த கால் மற்றும் நாயின் புகைப்படங்கள் அடுத்தடுத்து மாறி பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில், பழனி அருகே உள்ள ஆயக்குடி ஓபுலாபுரம் ஒட்டர்தெருவைச் சேர்ந்தவர் தயாள் சுல்தான் காதர் ராவுத்தர். இவருக்கு குடிமைப் பொருள் பிரிவு சார்பில் ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்பட்டது. அதில் குடும்ப தலைவரின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் தேசிய கொடியின் படம் இடம் பெற்றிருந்தது. இதைப்பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். 

இது குறித்து பழனி வருவாய்த்துறையினரிடம் கேட்ட போது, ஸ்மார்ட் கார்டுகள் அனைத்தும் சென்னையில் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சிலரது கார்டுகளில் புகைப்படங்கள் மாறி விடுகின்றன. அதே போல்தான் ஆயக்குடியைச் சேர்ந்த ஒருவரது ஸ்மார்ட் கார்டிலும் புகைப்படம் மாறியுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மாற்று கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட ஸ்மாரட் ரேசன் கார்டுகளில் புகைப்படங்கள் மாறி வருவது பயனாளிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

அரசு வழங்கும் ஸ்மார்ட் ரேசன் கார்டில் இதுபோன்ற புகைப்படங்கள் மாறி வருவதை தடுக்க, அதிகாரிகள் கவனமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...