கோவையில் பிரதேச ராணுவப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் 23-ம் தேதி நடக்கிறது

110-வது பிரதேச ராணுவப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வரும் 23-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணி முதல் நடக்கும் இந்த ஆட்சேர்ப்பு முகாமின் மூலம் மொத்தம் காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பொதுப்பிரிவில் 8 காலிப் பணியிடங்களும், துப்புரவுப் பணியாளர் பிரிவில் 3 காலிப் பணியிடங்களும் உள்ளன.

தமிழத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், முன்னாள் என்.சி.சி மாணவர்கள், துப்பாக்கிச்சுடும் வீரர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

பிரதேச ராணுவப்படையில் சேர விரும்பும் அரசு மற்றும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தோர், ஏற்கனவே பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழை பெற்று சமர்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிப்போரின் வயது வரம்பு 18 முதல் 42 வயது வரையுடைவர்கள் தகுதியானவர்கள்.

மேலும், பிரதேச ராணுவப்படையில் சேர விரும்புவோர் தங்களுடைய 10 புகைப்படங்கள், அடுத்த பயனாளியுடைய (nominee)  5 புகைப்படங்களை கொண்டு வரவேண்டும்.

தொடர்ந்து, ஆதார் கார்டு ( குடும்பத்தினருடையதும் சேர்த்து), பள்ளி மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றுகளின் அசலை எடுத்து வர வேண்டும்.  விண்ணப்பிபோர் திருமணமாயிருப்பின், தனது மனைவியி மதிப்பெண் சான்று, குழந்தை பிறப்புச் சான்று மற்றும் கூட்டு வங்கிக் கணக்கு போன்ற விவரங்களின் அசலை சமர்பிக்க வேண்டும்.

பொதுப்பிரிவுக் காலிப்பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். துப்புறவு பணியாளருக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவமுள்ளவர்களுககு முன்னுரிமை அளிக்கப்படும். 

உயரம் 160 செ.மீ-க்கு அதிகமாக இருக்க வேண்டும். மார்பின் அளவு 77 செ.மீட்டரும், விரிந்த நிலையில் மார்பு 82 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.

பிரதேச ராணுவப்படையில் சேர விரும்புவோர், முகாமில் நடத்தப்படும் அனைத்து மருத்துவப் பரிசோதனையில் கட்டாயம் தகுதி பெற வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...