தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீதான தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்ததால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நேற்று முன்தினம் (செப்.,18) உத்தரவிட்டார். கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் விளக்கம் அளித்திருந்தார். சபாநாயகரின் இந்த உத்தரவிற்கு எதிராக 18 எம்.எல்.ஏ.,க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி துரைசாமி முன்னிலையில் துவங்கியது. இதில், ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர், தினகரன் ஆகியோர் தரப்பில் கபில் சிபில், சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே, அரிமா சுந்தர் உள்ளிட்ட உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர். தினகரன் தரப்பில் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதிட்டார். தொடர்ந்து, சபாநாகர் தனபால் சார்பில் அரிமா சுந்தர் வாதிட்டார். தினகரன் தரப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக வாதங்களை முன்வைத்தார். 

அப்போது, நீதிமன்றத்தில் அரசுகளை குறை கூறக்கூடாது, இது வழக்கிற்கு தேவையற்றது எனக் கூறி அரிமா சுந்தர் தனது வாதத்தை தொடங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்கம் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என சபாநாயகர் சார்பில் கேட்கப்பட்டது. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் கேட்கப்பட்டது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்காமல் இருக்க அவகாசம் தேவை எனவும் கேட்கப்பட்டது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த தயாராக உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி துரைசாமி, 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது என்ற உத்தரவு மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கும். மறுஉத்தரவு வரும் வரை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது. 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு சபாநாயகர் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு இன்று (செப்.20) முடியும் நிலையில், தடை நீட்டிக்கப்பட்டது. சபாயாகர், முதல்வர், தலைமை செயலாளர், கொறடா ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

தினகரன் தரப்பின் முக்கிய கோரிக்கையான, 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விதித்த தடையை நீக்க வேண்டும் என்பதை ஏற்க நீதிமன்றம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...