மாநகராட்சியின் பல்வேறு வரி உயர்வைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை


கோவை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் வீடுகளுக்கு வரி மறு சீராய்வு, குடிநீர் வைப்புத் தொகை உயர்வு, குப்பைக்கு வரி விதிப்பு உள்ளிட்ட புதிய வரிகளையும், வரி உயர்வினையும் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது கோவை மாநகரத்தில் உள்ள அணைத்து வீடுகளையும் மறு அளவீடு செய்து 13.5 ஆண்டுகளுக்கான வரி விதிப்பு செய்துள்ளதை திரும்பப் பெற வேண்டும். குடிநீருக்கான வைப்பத் தொகையை ரூ.2 ஆயிரம் முதல் 7500 வரை உயத்தியுள்ளதை திரும்பப் பெற வேண்டும். மேலும், வீடுகளில் குப்பைகளுக்கு ரூ.20 முதல் 200 வரை வரிவிதிக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தேர்வு செய்யப்பட்ட மாமன்றம் இல்லாத நிலையில் மக்கள் பிரநிதிகள் மற்றும் மக்களிடம் ஏதும் கருத்துக்களை கேட்காமல் மாநகராட்சி அதிகாரிகளே வரிகளை உயர்த்தியதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.



முன்னதாக மாநகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டன உரையாற்றினார். கோவை மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி உள்ளிட்டு 100-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...