நீர்நிலைகளை அசுத்தம் செய்தால் சிறை தண்டனை - கேரள அரசு அதிரடி அறிவிப்பு

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அந்த அரசு தற்போது "ஹரிதா கேரளம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கேரளாவை தூய்மையாகவும், பசுமையாகவும் வைப்பதே நோக்கமாகும். 

இந்த திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு பிரபலங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் கேரள அரசு செய்து வருகிறது. மாநிலத்தை தூய்மையாக வைப்பதற்காக கேரள அரசு மற்றும் சுட்சித்வா மிஷன் அமைப்புடன் கேரள போலீஸாரும் இணைந்து செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ”ஹரிதா கேரளம்’’ திட்டம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதோ அல்லது அசுத்தம் செய்வதோ சட்டப்படி விரோதம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நீர்நிலைகளை அசுத்தம் செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டமுன்வடிவு நீர்பாசனத்துறையால் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் குளங்கள் பாதுகாப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுடன் கலந்து பேசி சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. 

கேரள அரசின் இந்த புதிய சட்டத்தால், குப்பைக் குளமாக காட்சியளிக்கும் நீர்நிலைகள் மற்றும் கழிவுகள் கலக்கப்படுவது போன்றவை தடுக்கப்படுகின்றன.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...