நீர்நிலைகளை அசுத்தம் செய்தால் சிறை தண்டனை - கேரள அரசு அதிரடி அறிவிப்பு

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. அந்த அரசு தற்போது "ஹரிதா கேரளம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் கேரளாவை தூய்மையாகவும், பசுமையாகவும் வைப்பதே நோக்கமாகும். 

இந்த திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு பிரபலங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் கேரள அரசு செய்து வருகிறது. மாநிலத்தை தூய்மையாக வைப்பதற்காக கேரள அரசு மற்றும் சுட்சித்வா மிஷன் அமைப்புடன் கேரள போலீஸாரும் இணைந்து செயல்பட ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ”ஹரிதா கேரளம்’’ திட்டம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதோ அல்லது அசுத்தம் செய்வதோ சட்டப்படி விரோதம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நீர்நிலைகளை அசுத்தம் செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டமுன்வடிவு நீர்பாசனத்துறையால் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் குளங்கள் பாதுகாப்புத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுடன் கலந்து பேசி சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. 

கேரள அரசின் இந்த புதிய சட்டத்தால், குப்பைக் குளமாக காட்சியளிக்கும் நீர்நிலைகள் மற்றும் கழிவுகள் கலக்கப்படுவது போன்றவை தடுக்கப்படுகின்றன.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...