அக்.,2-ம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கப் பணிகள் நடக்கும் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று (20.09.2017) தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் நடைபெற்ற தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்திவ்யா தொடங்கி வைத்தார். 

அப்போது, இது தொடர்பாக அவர் கூறியதாவாது, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் (ஊரகம்) தூய்மையே சேவை என்ற இயக்கம் கடந்த 15-ம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தமிழகத்தில் துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது 15.09.2017 முதல் 02.10.2017 (காந்தி ஜெயந்தி) வரையில் நடைபெறவுள்ளது. இத்தூய்மை பணியானது ஊரக மற்றும் நகர்புற  பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100 துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில், உதகை நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) ரவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்;ட இயக்குநர் முருகேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...