உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை கத்தியை காட்டி மிரட்டிய குட்கா விற்பனையாளர்கள் கைது

பெங்களூரில் இருந்து இரண்டு லாரிகளில் கோவைக்கு தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களான குட்கா பான் மசாலாக்கள் கொண்டு வருவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெரால்டு சத்ய புனிதன் சரவணம்பட்டி பகுதியில் லாரிகளை பறிமுதல் செய்து, அவற்றை பதுக்கி வைக்க இருந்த குடோன்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், அதிகாரி ஆய்வில் ஈடுபட்டிருந்த போது குடோனில் இருந்த குட்கா விற்பனையாளர்களான பவர் லால் (32), மஹிலால் (43), ஹனுமராம் (21) உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியை காட்டி மிரட்டியது.

இது தொடர்பக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், கத்தியை காட்டி மிரட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்ததோடு அவர்களை கைது செய்து சிறையலடைத்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...