நதிகளை மீட்கும் முயற்சியில் ஈஷாவுடன் கைகோர்த்த குஜராத் அரசாங்கம்

'நதிகளை மீட்போம்' பேரணியின் விழிப்புணர்வு பிரச்சாரம் செப்டம்பர் 20-ம் தேதி குஜராத் சபர்மதி நதி அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜட்கி வாசுதேவ், குஜராத் மாநில முதலமைச்சர் விஜய்ரூபாணி, குஜராத் மாநில கல்வித் துறை அமைச்சர் பூபேந்திரசிங்ம்ஹுபா சுதாசமா, தேசிய விருது பெற்ற விவசாயி கெனபை படேல், நடிகர் மனோஜ்ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜட்கி வாசுதேவ் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.



8000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நதிகளை மீட்போம் பிரச்சார நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதலமைச்சர் பேசியதாவது:-

குஜராத் மாநில அரசும் மக்களும் 'நதிகளை மீட்போம்' பேரணியை வரவேற்கிறோம். நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு தங்கள் ஆதரவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.



இதனைத்தொடர்ந்து, ஜட்கி வாசுதேவ் பேசுகையில், நம் தேசத்தில் இப்போது வளர்ந்துவரும் அரசியல் ஒற்றுமை இந்த நதிகளை மீட்போம் இயக்கத்தின் மூலம் வெளிப்படுகிறது. மேலும் நதிகளை மீட்க தங்களது ஆதரவினை வேண்டி 16 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியபோது உடனடியாக பதிலளித்தவர்களிள் குஜராத் முதலமைச்சர் ஒருவர் என்றார்.



தொடர்ந்து, குஜராத்தின் நதிகளை மீட்க குஜராத் அரசாங்கம் ஈஷா அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றிகொண்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...