கோவை மக்களுக்கு இனி 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் - அமைச்சர் வேலுமணி


கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதும் குறித்தும், கோவை மாநகரத்திற்க்கு குடிநீரைக் எப்படி சீராக வழங்குவது பற்றியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நகராட்சத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட சட்டமன்ற,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் அரசு, மக்களுக்கான எல்லா திட்டங்களையும் சிறப்பாக செய்து கொண்டு வருகிறது. வரும் டிசம்பர் 3-ஆம் தேதி கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்க இருக்கிறது. 

மழை வந்து அணைகள் நிரம்பி வரும் வேளையில், மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சியான சூழலில் பொதுமக்கள் பொறுமையுடன் எங்களுக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள். அவர்களுக்கு அரசு சார்பில் நன்றியைக் தெரிவித்து கொள்கிறேன்.

குறிப்பாக சிறுவானி பகுதியில் உள்ள மக்களுக்கு இனி 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சீராக வழங்கப்படும். இன்றிலிருந்து கோவை மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் தண்ணீரைக் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...