நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய், அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக மெர்சல் உருவாகியுள்ளது. இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிய மெர்சல் டீசர், வெளியான 20 மணி மணி நேரங்களில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி பார்வைகள் பெற்று உள்ளது. எனவே, யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்கிற சாதனையை மெர்சல் டீசர் படைத்துள்ளது. 

இந்த நிலையில், ஏ.ஆர். பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் மெர்சலாயிட்டேன் என்ற பெயரில் படம் தயாரித்து வரும் தயாரிப்பாளர் ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் தலைப்பை பதிவு செய்திருப்பதாகவும், மெர்சல் என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மெர்சலாயிட்டேன் மற்றும் மெர்சல் ஆகிய இரு வார்த்தைகளும் ஒரே அர்த்தம்தான் எனக் கூறியுள்ளார். எனவே தலைப்பை முறைகேடாக டிரேட் மார்க்கில் பதிவுசெய்துள்ளதாக அவர் புகார் தெரிவித்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள்,  மெர்சல் என்ற பெயரில் விஜயின் படத்தை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.  அதிகப் பொருட்செலவில் இந்தப்படம் தயாரிப்பதால் தடை விதிக்கக்கூடாது என்ற தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் விடுத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.  

மேலும்,இது குறித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், அக்டோபர் 3-ம் தேதி வரை மெர்சல் என்ற பெயரில் படத்தை விளம்பரம் செய்யக் கூடாது எனக் கூறி வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...