கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் அக்.,4 வரை நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது. வெளிநாட்டைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு மத்திய அரசின் அன்னிய முதலீட்டு வாரியம் 2007ல் அனுமதி அளித்தது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தின் உதவியுடன், இந்த அனுமதி கிடைக்க கார்த்தி நடவடிக்கை மேற்கொண்டதாக கடந்த மே 15-ம் தேதி தனது முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, கார்த்தி ஆஜராகவில்லை. இதையடுத்து கார்த்திகுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து கார்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (22.09.2017) மீண்டும் வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகு வெளிநாடுகளில் சொத்து உள்ளதால் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக்கூடாது என வாதிட்டார். இதனையடுத்து கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீசை அக்டோபர் 4 -ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு, விசாரணையை அன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...