கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் அக்.,4 வரை நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது. வெளிநாட்டைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு மத்திய அரசின் அன்னிய முதலீட்டு வாரியம் 2007ல் அனுமதி அளித்தது. அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தின் உதவியுடன், இந்த அனுமதி கிடைக்க கார்த்தி நடவடிக்கை மேற்கொண்டதாக கடந்த மே 15-ம் தேதி தனது முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு, கார்த்தி ஆஜராகவில்லை. இதையடுத்து கார்த்திகுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து கார்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று (22.09.2017) மீண்டும் வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகு வெளிநாடுகளில் சொத்து உள்ளதால் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக்கூடாது என வாதிட்டார். இதனையடுத்து கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீசை அக்டோபர் 4 -ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு, விசாரணையை அன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...