சிறப்பாசிரியர் தேர்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் செல்போன் திருட்டு


கோவை  ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் இன்று (23.09.2017)  பகுதி நேர ஆசிரியர்களுக்கான சிறப்பாசிரியர் தேர்வு நடைபெற்றது. ஆர்.எஸ்.புரம் பள்ளி மையத்தில் நடந்த இத்தேர்வில் 50-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தேர்வு எழுத வந்தவர்கள் செல்போன்களை அருகில் உள்ள ஓரு அறையில் வைக்கும்படி பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேர்விற்கு வந்தவர்கள் செல்ப்போன்களை பள்ளியின் ஓரு அறையில் வைத்து இருந்தனர். தேர்வு முடிந்த பின்னர் செல்போன்களை எடுப்பதற்காக ஆசிரியர்கள் சென்றுள்ளனர். அப்போது,  ராஜேஷ், ராஜ்குமார் உள்ளிட்ட 4  பகுதி நேர ஆசிரியர்களின் செல்போன்கள் மட்டும் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் செல்போன் திருட்டு போனது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டடனர். ஆனால், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

செல்போன் திருடு போனதற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணம் என்றும், செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...