செந்தில் பாலாஜி உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கரூரில் முன்னாள் அமைச்சரும், தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர் சரவணனுக்கு சொந்தமான நிதி நிறுவனதிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வருவாய்க்கு அதிகாகமாக சொத்து சேர்த்ததாக கரூரில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் 3-வது நாளாக நடத்திய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த சோதனையின் போது, கருப்பு பணம் பதுக்கியதும், அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததும் தெரிய வந்தது. 

இந்த சோதனையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும்,  ரூ.1.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.50 கோடி மதிப்பு பினாமி சொத்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 3 லாரிகளை திண்டுக்கல்லில் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட 3 லாரிகளும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...