பொக்லைன் இயந்திரங்களால் மண் வளம் பாதிக்கப்படுவதாகக் கூறி தவளை, நண்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் வண்டல் மண் எடுப்பதால் மண்வளம் பாதிக்கப்படுவதாகக் கூறி தவளை, நண்டு, மண்புழு, புழுக்களுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாளான இன்று பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தவளை, நண்டு, மண்புழு, புழுக்கள் ஆகியவற்றுடன் மனு அளிக்க வந்தனர்.



அப்போது, கோவை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுப்பதால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், குளக்கரையிலும், நிலத்திலும் வாழும் தவளை, நண்டு, மண்புழு, புழுக்கள் போன்ற உயிரினங்கள் அழிந்து போவதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.



தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவான இது போன்ற நுண்ணுயிர்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும், வண்டல் மண் எடுக்கிறோம் என்ற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் மழைவளம், நீர் வளம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகப்படியாக வண்டல் மண் எடுப்பதையும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதனைத்தொடந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வழங்கினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...