பொக்லைன் இயந்திரங்களால் மண் வளம் பாதிக்கப்படுவதாகக் கூறி தவளை, நண்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் வண்டல் மண் எடுப்பதால் மண்வளம் பாதிக்கப்படுவதாகக் கூறி தவளை, நண்டு, மண்புழு, புழுக்களுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாளான இன்று பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தவளை, நண்டு, மண்புழு, புழுக்கள் ஆகியவற்றுடன் மனு அளிக்க வந்தனர்.



அப்போது, கோவை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுப்பதால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும், குளக்கரையிலும், நிலத்திலும் வாழும் தவளை, நண்டு, மண்புழு, புழுக்கள் போன்ற உயிரினங்கள் அழிந்து போவதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் வேதனை தெரிவித்தனர்.



தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆதரவான இது போன்ற நுண்ணுயிர்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும், வண்டல் மண் எடுக்கிறோம் என்ற பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் மழைவளம், நீர் வளம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகப்படியாக வண்டல் மண் எடுப்பதையும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதனைத்தொடந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வழங்கினர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...