கோவை மாநகராட்சியின் மக்கள் விரோதப்போக்கினைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

கோவை மாநகராட்சியின் புதியவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை, குப்பைகளுக்கு வரி உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்து வரும் கோவை மாநகராட்சியினைக் கண்டித்து குறிச்சி, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிக் கழகங்களுக்கு உட்பட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக மாநகர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் மு.முத்துசாமி மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.



இந்த முற்றுகைப் போராட்டத்தில் கோவை மாநகர மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற மாநகராட்சியின் புதியவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு வைப்புத்தொகை, குப்பைவரி உள்ளிட்ட மாநகராட்சியின் மக்கள்விரோதப் போக்கினைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த பகுதிக்கழகங்களுக்கு உட்பட்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் மற்றும் மாவட்டக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக செயலாளர்கள், குறிச்சி, குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் பகுதிக்கழகங்களுக்கு உட்பட்ட பகுதிக்கழக செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...