முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ. கைது

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 நாட்களுக்கு ஓருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. ஆனால், கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.



இந்த நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தினை முற்றுகையிட்டு திடீர்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழியும் நிலையில், இந்த முறை 20 நாட்கள் கடந்தும் குடிநீர் வழங்கப்பட வில்லை என  போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தெரிவித்தார். 



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், குழாய்களில் பாதிப்பு இருந்தால் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.



மேலும், மாநகராட்சி உயர் அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்றும், அதுவரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். கிழக்கு மண்டல அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சீரான குடிநீர் கேட்டு போராட்டம் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...