முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ. கைது

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 15 நாட்களுக்கு ஓருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. ஆனால், கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது.



இந்த நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தினை முற்றுகையிட்டு திடீர்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும், கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழியும் நிலையில், இந்த முறை 20 நாட்கள் கடந்தும் குடிநீர் வழங்கப்பட வில்லை என  போராட்டத்தில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தெரிவித்தார். 



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், குழாய்களில் பாதிப்பு இருந்தால் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.



மேலும், மாநகராட்சி உயர் அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்றும், அதுவரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். கிழக்கு மண்டல அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சீரான குடிநீர் கேட்டு போராட்டம் 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...