டுவிட்டரில் இனி 280 எழுத்துக்கள் வரை எழுதும் வசதி அறிமுகம்


டுவிட்டரில் கருத்து பதிவிடுவோர் இனி 280 எழுத்துக்கள் வரை அடிக்கலாம் என டுவிட்டர் அறிவித்துள்ளது. இதுவரை 140 எழுத்துக்களுக்குள் மட்டுமே கருத்து பதிவிட முடியும் என்ற வரைமுறை இருந்தது.இந்த கட்டுப்பாட்டை தளர்த்தி, சோதனை அடிப்படையில் 280 எழுத்துக்கள் வரை பதிவிடும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து டுவிட்டரின் தலைமை நிர்வாகி ஜாக் டோர்சி தனது டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், இது சிறிய அளவிலான மாற்றமாக இருந்தாலும் பலரிடமும் வரவேற்பை பெறும். கருத்து பதிவிடுவோர் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புவோருக்கு 140 முதல் 160 எழுத்துக்கள் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது. இதனால் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, டுவிட்டர் குழுவால் சோதனை அடிப்படையில் 280 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமாகும்மேலும் எழுத்துக்களின் எண்ணிக்கையை முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதே போன்று ஜப்பான், சீனா மற்றும் கொரிய மொழிகளிலும், பழைய எழுத்து முறை வரைமுறைகளை மாற்றி அமைக்க உள்ளதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...