கோவையில் செயல்படும் மத்திய அரசு அச்சகத்தை மூடும் முயற்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட உள்ளது - கு.இராமகிருட்டிணன்

கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூடுவதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியால் தமிழகம்  வஞ்சிக்கப்பட உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 



கடந்த 1964-ம் ஆண்டு காமராசர் ஆட்சியின் போது மத்திய அரசின் அச்சகம் போராடி கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் நிறுவப்பட்டது. இதில் 70 பேர் தற்போது பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மறைமுகமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.



இந்தியா முழுவதிலும் இது போல் 17 அச்சகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிந்தியாவில் உள்ள 6 அச்சகங்களை முழுவதுமாக மூடிவிட்டு அதனை வட மாநிலங்களில் உள்ள அச்சகங்களோடு இணைத்து அவற்றை நவீனப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

அதற்காக, தமிழகம், கேரளாவில் உள்ள அச்சகங்க நிலங்களை விற்கவும், கர்நாடகத்தில் உள்ள அச்சக நிலத்தை அம்மாநில அரசிடம் ஒப்படைப்பதாகவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



தென்னிந்தியாவித்கு ஒரு அச்சகத்தை கூட விட்டு வைக்காமல், வட இந்திய அச்சகங்களை நவீனப்படுத்த நினைப்பதிலேயே தமிழகம் வஞ்சிக்கப்படுவது உண்மை என புலப்படுகிறது. உடனடியாக இந்த முடிவு கைவிடப்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களிடம் பேசி போராட்டம் நடத்த உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...