அப்பல்லோ மருத்துவர் ரெட்டி கூறிதான் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிந்துகொண்டோம்- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ரெட்டி, சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று செய்தியாளர்ளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது, மருத்துவமனை மருத்துவர் ரெட்டி, சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர் போன்ற அங்கேயே தங்கியிருந்தவர்களிடம் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம். உடல்நிலை குறித்து அங்கேயே தங்கி இருந்தவர்களிடம் விசாரித்துதான் வந்திருக்கின்றோம்.

தற்போதைய தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து டி.டி.வி.தினகரன் சொல்லும் வார்த்தைகள் மூலமாக அவர் அவரது தரத்தை வெளிப்படுத்துகிறார். தினகரன் மீண்டும் அதிமுக-வில் இணைய "காலம் பதில் சொல்லும்".



ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க முதலமைச்சர் உத்திரவிட்டு இருக்கின்றார். இதில், சிறந்த விமர்சனங்களுக்கு அப்பாற்றபட்ட நீதிபதி விசாரணை கமிஷனில் நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் சி.பி.ஐ விசாரணை என்ற தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது குறித்து அவரிடம்தான் கேட்க வேணடும்.

மேலும், ஜெனீவாவில் வைகோ மீதான தாக்குதல் முயற்சியை தொடர்ந்து அவருக்கு அங்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் நிச்சயம் கண்டனம் தெரிவித்திருப்போம்.

இவ்வாறு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...