குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகளிடையே கருத்து வேறுபாடு - வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (28.09.2017) விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்  ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் உப்பிலிபாளையம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்து தனியார் கட்டுமான நிறுவன குடியிருப்புகள் அமைக்கப்பட்டதற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கட்சிசார்பற்ற  விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட சிலர் பாராட்டு தெரிவித்தனர்.



அப்போது, அதற்கு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துடன், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், இது தொடர்பாக பேசக்கூடாது என தெரிவித்தனர். குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பேசியதால்,  அரங்கில் இரு தரப்பு விவசாயிகள் சங்கத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. இதனைதொடந்து இரு தரப்பினரையும் மாவட்ட வருவாய் அலுவலர் சமரசப்படுத்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் தொடந்து நடைபெற்றது.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...