நவராத்திரி பண்டிகையின் கொலு வழிபாடுகளில் ஜெயலலிதாவின் சிலைகள் - ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் கடந்த 21-ம் தேதி தொடங்கி நாளை (29.09.2017) வரை கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம். 

மேலும், நவராத்திரி விழாவையொட்டி பல்வேறு கோயில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கொலு வைத்து வழிபாடு நடத்துகின்றனர். கொலு பொம்மைகளில், பெரும்பாலும் கடவுள்களின் சிலைகளே இடம் பெற்றிருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் போது, கொலு பொம்மைகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொம்மைகலும் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். 



ஜெயலலிதா என்றாலே, அவர் முதலமைச்சராக இருந்த போது உடுத்திய பச்சை நிற ஆடையுடன்தான் நியாபகத்திற்கு வருவார். எனவே, பச்சைநிற சேலை அணிந்தது போன்றே ஜெயலலிதாவின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தில் கொலு வைக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இது தொடர்பாக ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும் கொலு பொம்மைகள் விற்பனையாளர் பேசுகையில், ஜெயலலிதா போன்ற கொலு பொம்மைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். பச்சை நிறம் கொண்ட சேலையுடன் இருக்கும் பொம்மைகளை மக்கள் அதிகளவு விரும்புகின்றனர். தற்போது, ஜெயலலிதாவின் கொலு பொம்மைகள் விற்றுத் தீர்ந்து விட்டன. இவ்வாறு, அவர் கூறினார். 

இரும்புப் பெண்மணியான ஜெயலலிதா, தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டின் வேறு மாநிலங்களிலும் உள்ள பெண்களுக்கு, முன்மாதிரியாக இருந்து வருகிறார். 

கொலு பூஜையில் ஜெயலலிதாவின் பொம்மைகள் இடம் பெறுவது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பேசுகையில்,  தமிழக பெண்கள் ஜெயலலிதாவை, தங்களது காப்பாளராக பார்க்கின்றனர். கொலு பூஜையில் அவரது சிலை கடவுலுக்கு நிகராக மதித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

ஜெயலலிதா போன்ற கொலு பொம்மைகள் ரூ.250 முதல் ரூ.1,200 வரையில் பல்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் கோவை பூம்புகார் கைவினைப் பொருட்கள் அங்காடியில் ஜெயலலிதாவின் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...