நவராத்திரி பண்டிகையின் கொலு வழிபாடுகளில் ஜெயலலிதாவின் சிலைகள் - ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

முப்பெரும் தேவிகளின் அருளை வேண்டி இந்துக்களால் முறைப்படி விரதமிருந்து அனுஷ்ட்டிக்கப்படுகின்ற நவராத்திரி விரதம் கடந்த 21-ம் தேதி தொடங்கி நாளை (29.09.2017) வரை கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி ஒன்பது நாட்களிலும் ஒன்பது வகையான புஷ்பம் கொண்டு ஒன்பது வகையான அலங்காரம் செய்வது வழக்கம். 

மேலும், நவராத்திரி விழாவையொட்டி பல்வேறு கோயில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கொலு வைத்து வழிபாடு நடத்துகின்றனர். கொலு பொம்மைகளில், பெரும்பாலும் கடவுள்களின் சிலைகளே இடம் பெற்றிருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் போது, கொலு பொம்மைகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொம்மைகலும் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். 



ஜெயலலிதா என்றாலே, அவர் முதலமைச்சராக இருந்த போது உடுத்திய பச்சை நிற ஆடையுடன்தான் நியாபகத்திற்கு வருவார். எனவே, பச்சைநிற சேலை அணிந்தது போன்றே ஜெயலலிதாவின் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தில் கொலு வைக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இது தொடர்பாக ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும் கொலு பொம்மைகள் விற்பனையாளர் பேசுகையில், ஜெயலலிதா போன்ற கொலு பொம்மைகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். பச்சை நிறம் கொண்ட சேலையுடன் இருக்கும் பொம்மைகளை மக்கள் அதிகளவு விரும்புகின்றனர். தற்போது, ஜெயலலிதாவின் கொலு பொம்மைகள் விற்றுத் தீர்ந்து விட்டன. இவ்வாறு, அவர் கூறினார். 

இரும்புப் பெண்மணியான ஜெயலலிதா, தமிழகத்தில் மட்டுமின்றி நாட்டின் வேறு மாநிலங்களிலும் உள்ள பெண்களுக்கு, முன்மாதிரியாக இருந்து வருகிறார். 

கொலு பூஜையில் ஜெயலலிதாவின் பொம்மைகள் இடம் பெறுவது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பேசுகையில்,  தமிழக பெண்கள் ஜெயலலிதாவை, தங்களது காப்பாளராக பார்க்கின்றனர். கொலு பூஜையில் அவரது சிலை கடவுலுக்கு நிகராக மதித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

ஜெயலலிதா போன்ற கொலு பொம்மைகள் ரூ.250 முதல் ரூ.1,200 வரையில் பல்வேறு அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் கோவை பூம்புகார் கைவினைப் பொருட்கள் அங்காடியில் ஜெயலலிதாவின் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...