தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை எதிரொலி - பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம், காந்திஜெயந்தி என செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினமாகும். பள்ளிகளுக்கு ஏற்கனவே காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வெளியூரில் தங்கி படிக்கும் மற்றும் வேலை பார்க்கும் நபர்கள் தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.



தொழில்நகரமான கோவையில் படிக்கவோ, பணிபுரியவோ ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து வந்து தங்கியுள்ளனர். இதனால், அவர்கள் இந்த தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால், புதிய பேருந்து நிலையம், காந்திபுரம், உக்கடம் போன்ற பேருந்து நிலையங்களிலும், கோவை மத்திய ரயில் நிலையத்திலும் ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் குவிந்துள்ளனர்.



இதையொட்டி, பயணிகளின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸார் நகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...