நெல்லையில் செய்தியாளர்கள் மீது வழக்கு பதிந்த காவல்துறையை கண்டித்து கோவை பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலையில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அருகில் வெடி சத்தம் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை செய்தியாளர்கள் மற்றும் தினகரன் பத்திரிகை செய்தியாளர் உள்ளிட்ட மூவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பணகுடி காவல் ஆய்வாளரைக் கண்டித்தும், வழக்கை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை பத்திரிகையாளர்கள் மன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



ஆர்ப்பாட்டத்தின் போது பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதலை நடத்தியதை கண்டித்தும், வழக்கு பதிவு செய்த பணகுடி காவல் ஆய்வாளரை கண்டித்தும், வழக்கை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை பத்திரிகையாளர்கள் மன்றத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...