கோவையில் நடைபெற்ற வோடஃபோன் மாரத்தான் 2017 போட்டியில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


கோயம்புத்தூர் ரன்னர்ஸ், ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் மற்றும் கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர் தடகள சங்கம், ஆகியவற்றுடன் வோடாபோன் இணைந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக வோடாபோன் கோயம்புத்தூர் மாரத்தான் 2017 நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இதில் 21.1 கிமீ ஓட்டம், 10 கிமீ ஓட்டம் மற்றும் 5 கிமீ ஓட்டம் மற்றும் நடை என்ற மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். இதில் மொத்தம் 2.5 லட்சம் என்ற தொகைக்கும் அதிகமான ரொக்கப் பரிசுத் தொகையானது, வழங்கப்படுகின்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான வகையினங்களில் வெற்றிபெறும் நபர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.



அதன்படி, முதலாம் போட்டியான 21.1 கி.மீ (அரை மாரத்தான்) பந்தயத்தை காலை 5.00 மணிக்கு கோயம்புத்தூர் கேன்சர் பவுன்டேஷன், நிர்வாக அறங்காவலர் டாக்டர்.டி.பாலாஜி கொடியசைத்து துவக்கிவைத்தார்.



இதில் 2000 நபர்கள் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் வெல்லிங்டனை சேர்ந்த ஆர். பத்மநாபன், 01.10.33 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பெற்றார். இரண்டாமிடத்தை ஜி.என். வினோத் 01.11.06 நிமிடங்களில் வந்தாடைந்தார். மூன்றாமிடத்தை டி. நிகில் 01.12.02 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார்.



பெண்கள் பிரிவில் வசந்தா மணி 01.29.45 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். கே. சுகுணா 01.30.39 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். வி.சோனியா 01.36.00 நிமிடங்களில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். மூத்தோர் ஆண்கள் பிரிவில் முகமது இட்ரிஸ் 01.24.01 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். போஸ்கோ 01.32.54 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். நஞ்சுன்டன் 01.34.36 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். பெண்கள் பிரிவில் மீனாட்சி சங்கர் 02.05.35 நிமிடங்களில் கடந்து முதலிடத்தை பிடித்தார். ஊர்மிளா சுரானா 02.11.31 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தை பிடித்தார். தொடர்ந்து ரக்ஷனா பட்டேல் 02.24.04 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார்.



இரண்டாம் போட்டியான 10 கி.மீ மாரத்தான் பந்தயமானது காலை 6.00 மணிக்கு துவங்கியது. இதை வோடாபோன் தமிழ்நாடு துணைத் தலைவர் (மார்க்கெட்டிங்), மணிஷ் சிங்கால் கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் 4,700 பேர் கலந்து கொண்டார்கள். இதில் ஆண்கள் பிரிவில் பி.கிரண் 00.31.52 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், எம். ராஜ்குமார் 00.32.00 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், சுரேஷ்குமார் 00.32.33 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார்.

பெண்கள் பிரிவில் பானுப்பிரியா 00.44.48 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், திவ்ய லட்சுமி 00.45.51 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், எஸ்.கிருத்திகா 00.46.59 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். மூத்தோர் ஆண்கள் பிரிவில் டி.எம்.நாராயணன் 00.43.43 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், பி. பாண்டுரங்கன் 00.43.54 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், ஜெயகுமார் 00.44.29 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார். பெண்கள் பிரிவில் ஆர்.லட்சுமி 00.49.28 நிமிடங்களில் கடந்து முதலிடத்தையும், கே.ஆர்.தீபா 01.08.50 நிமிடங்களில் கடந்து இரண்டாமிடத்தையும், கீதா பாலு 01.09.21 நிமிடங்களில் கடந்து மூன்றாமிடத்தை பிடித்தார்.



மூன்றாம் போட்டியான 5 கி.மீ மாரத்தான் பந்தயமானது காலை 7.00 மணிக்கு துவங்கியது. இதை வோடாபோன் கோயம்புத்தூர், மண்டல தலைவர், நவீன் சந்தரன் நாயர்   கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் 7,100 பேர் கலந்து கொண்டு ஓடினார்கள்.



Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...