கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பேரூர் நீர்நிலைகள் அருகே பனை விதை நடும் பணி தீவிரம்

கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தற்போது, பசுமையை மீட்டுக்கும் விதமாக மரக்கன்றுகளை நடும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி முந்தைய களப்பணியில் போது விதைப் பந்துகள் வீசும் பணி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து, 34-வது தொடர் களப்பணியில் பனை விதை நடும் ஆறாவது வார களப்பணி இன்று நடைபெற்றது. பேரூர் அருகே உள்ள கங்கநாராயணசமுத்திரம் மற்றும் சொட்டையாண்டி குட்டை ஆகிய பகுதியில் நடைபெற்ற இந்த களப்பணியின் போது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 35-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பனை விதை நடும் களப்பணியில் ஈடுபட்டனர். இந்த களப்பணியின் போது 800 பனை விதைகள் நடப்பட்டன. 

இதனைத்தொடர்ந்து, அக்டோபர் 2ம் தேதியன்று (நாளை) காலை 7 முதல் 11 மணிவரை முத்தண்ணன் குளம் என்ற குமாரசாமி குளத்தில் களப்பணி நடைபெறும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...