தூய்மைப் பணிகளுடன் காந்தி ஜெயந்தியை கொண்டாடிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு


கோவை மாவட்டத்தில் அழிந்துவரும் நீர்நிலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர் களப்பணிகள் மூலம் பல்வேறு குளங்களையும், நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி தங்களது சிறந்த சேவையினை வழங்கி வருகின்றனர்.

அதன்படி, இன்று காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு முத்தண்ணன் குளம் என்றழைக்கப்படும் குமாரசாமி குளத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றது.



கோவை மாநகராட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த களப்பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், பாரத ஸ்டேட் வங்கி, இஎப்ஐ கோயம்புத்தூர் அமைப்பினர் உள்ளிட்டு ரோட்டரி சங்கத்தினர் மற்றும் மாவட்ட சட்ட உரிமை கழகத்தினரும் கலந்துகொண்டனர்.



தொடர்ந்து, இந்த களப்பணியில் இரண்டு டிராக்டர் அளவுள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குளத்தை சுத்தம் செய்ய 8 வாரங்களுக்கு தேவையான உபகரணங்களை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தினர் வழங்க உள்ளனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...