கோவையில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்களர் பட்டியல் இன்று வெளியீடு

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று வெளியிட்டார்.

கோவை மாவட்த்தில் 2017 ஜனவரி 6 ம் தேதி முதல் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.



அதன்படி, தற்சமயம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,34,992 ஆண்கள், 1,40,641 பெண்கள், 28-மூன்றாம் பாலினம் என 2,75,661 வாக்காளர்களும், சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,42,946 ஆண்கள், 1,46,304 பெண்கள், 11-மூன்றாம் பாலினம் என 2,89,261 வாக்காளர்களும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,09,659 ஆண்கள், 2,09,038 பெண்கள், 68-மூன்றாம் பாலினம் என 4,18,765 வாக்காளர்களும் உள்ளனர்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,56,461 ஆண்கள் 1,53,767 பெண்கள், 27-மூன்றாம் பாலினம் என 3,10,255 வாக்காளர்களும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,52,808 ஆண்கள், 1,53,342 பெண்கள், 54 மூன்றாம் பாலினம் என மொத்தம் 3,06,204 வாக்காளர்களும் உள்ளனர்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,22,094 ஆண்கள், 1,21,983 பெண்கள், 12 மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,44,089 வாக்காளர்களும், சிங்காநல்லூர் சட்மன்ற தொகுதியில் 1,53,637 ஆண்கள், 1,53,819 பெண்கள், 28 மூன்றாம் பாலினம் என மொத்தம் 3,07,484 வாக்காளர்களும், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 1,46,553 ஆண்கள், 1,49,278 பெண்கள், 28 மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,95,859 வாக்காளர்களும் உள்ளனர்.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 1,04,692 ஆண்கள், 1,10,964 பெண்கள், 14 மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,15,670 வாக்காளர்களும் உள்ளனர். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 96,566 ஆண்கள், 1,01,709 பெண்கள், 13 மூன்றாம் பாலினம் என மொத்தம் 1,98,288 என மொத்தம் வாக்காளர்களும் உள்ளனர். 

அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தமாக 14,20,408 ஆண்கள், 14,40,845 பெண்கள், 283 மூன்றாம் பாலினம் என மொத்தம் 28,61,536 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி கோவை மாவட்டத்தில் 2018 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்யும் பணி இன்று (அக்டோபர் 3) முதல் அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றுத் திருத்தம் மேற்கொள்ள 8.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, ஆர்.சின்னசாமி, மாநகராட்சி உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்னடர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...